» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கோவில்பட்டி பள்ளியில் வ.உ.சி. படம் வரைந்து 152 அகல் விளக்கேற்றி மரியாதை செய்த மாணவர்கள்

செவ்வாய் 5, செப்டம்பர் 2023 5:01:21 PM (IST)



கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படம் வரைந்து 152 அகல் விளக்கு ஏற்றி மாணவர்கள் மரியாதை செலுத்தினர். 

கப்பலோட்டிய தமிழர் சிதம்பனாரின் 152வது பிறந்த நாளையொட்டி  கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்தில் வஉசி-யின் படம் வரைந்து 152 அகல் விளக்கேற்றி சுதேசி பொருட்களை வாங்கிடவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேசபக்தி தேச ஒற்றுமை வளர்த்திட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்பு கப்பலோட்டிய தமிழனை நினைவு கூறும் வகையில் காகித கப்பலை நீரில் மிதக்க விட்டு நினைவு கூர்ந்தனர். 

டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவ படத்திற்குமலர் தூவி மரியாதை செலுத்தி ஆசிரியர்களுக்கு மாணவர்கள் இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க பப்ளிக் இமேஜ் தலைவர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றார். நாடார் தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 



இந்நிகழ்ச்சியில் பள்ளி குழு உறுப்பினர்கள் ராஜா அமரேந்திரன், மணிக்கொடி, நாடார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வெள்ளைச்சாமி, ஆசிரியர்கள் ஷீபாராணி, கனகலட்சுமி,மாலா தேவி, செல்வராணி, பிருந்தா தேவி, அமலா தேவி,உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து

அக்டோபர்Sep 5, 2023 - 07:32:33 PM | Posted IP 162.1*****

முப்பதில் ஒரு potato வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory