» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

திருச்செந்தூர் வட்டார தடகளப் போட்டி: நாசரேத் தூய யோவான் பள்ளி சாம்பியன்!

வெள்ளி 1, செப்டம்பர் 2023 9:50:19 AM (IST)



திருச்செந்தூர் வட்டார பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற தடகளப் போட்டிகளில் நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாம்பியன் பட்டம் பெற்றனர். 

திருச்செந்தூர் வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வி கல்லூரியில் நடந்தது. இதில் பல பிரிவுகளின் கீழ் ஓட்டப்பந்தயங்கள், தொடர் ஓட்ட பந்தயங்கள், தடை தாண்டும் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் உட்பட பல்வேறு போட்டிகளில் நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு, வெற்றி பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் கைபற்றினர். 

வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குனர் வினோதா, உடற்கல்வி ஆசிரியை ஜெபா ஆகியோரையும் பள்ளி தாளாளர் வயலா மர்காஷிஸ், தலைமை ஆசிரியை (பொறுப்பு) ஜூலியட் ஜெயசீலி பள்ளி ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், ஆசிரியைகள், அலுவலர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory