» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இரட்டைக்கரை கால்வாயில் ஆட்சியர் பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளைத் தடுத்துக் கண்காணிக்க உத்தரவு!

வெள்ளி 12, ஜூன் 2026 11:18:08 AM (IST)



கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்குப் பேயங்குழி இரட்டைக்கரை கால்வாயினை மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்ததாவது: விவசாயப் பணிகளுக்குத் தடையின்றித் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வடக்குப் பேயங்குழி கிராமத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இரட்டைக்கரை கால்வாயில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கால்வாயில் தண்ணீர் தங்குதடையின்றிச் சென்று கொண்டிருப்பதை நேரில் பார்வையிட்டதோடு, தூர்வாரப்பட்டதன் மூலம் நீரோட்டம் சீராக உள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்பட்டது. கால்வாயில் திறந்து விடப்படும் நீரானது, எவ்விதத் தடையுமின்றி பாசனப் பரப்பின் கடைமடைப் பகுதி வரை முழுமையாகச் சென்றடைவதை அதிகாரிகள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும். 

நீர்வழிப் பாதையில் எங்கும் அடைப்புகளோ அல்லது ஆக்கிரமிப்புகளோ ஏற்படாத வண்ணம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனத் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்தார். ஆய்வின்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் கதிரவன், உதவிப் பொறியாளர் மற்றும் துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory