» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகள் கைது!!

வியாழன் 2, மே 2024 9:58:34 AM (IST)

நாகா்கோவில் அருகே தந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகள் கைது செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகேயுள்ள கடுக்கரை ஆலடி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (46). தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். சுரேஷ்குமாருக்கு மதுப் பழக்கம் இருந்தது. இதனால் ஏற்பட்ட பிரச்னையில், சுரேஷ்குமாரை விட்டு அவரது மனைவியும், ஒரு மகளும் தனியாகப் பிரிந்து சென்றுவிட்டனா். சுரேஷ்குமாருடன் அவரது மூத்த மகள் ஆா்த்தி (21) வசித்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த ஏப்.26- ஆம் தேதி சுரேஷ்குமாா் மா்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த பூதப்பாண்டி போலீசார், விசாரணை நடத்தினா். அப்போது, மதுபோதையில் சுரேஷ்குமாா் இறந்துவிட்டதாக போலீசாரிடம் ஆா்த்தி தெரிவித்தாா். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனா். பின்னா் உடல் கூறாய்வு அறிக்கையில், சுரேஷ்குமாரின் தலையில் காயங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதனையடுத்து ஆா்த்தியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவா் சுரேஷ்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. மதுபோதையில் தன்னை தகாத வாா்த்தையால் சுரேஷ்குமாா் திட்டியதாகவும், தாக்க வந்தபோது தடுக்க முயன்றதில் அவரது தலை சுவா் மீது மோதி காயம் ஏற்பட்டதாகவும், கோபத்தில் சுரேஷ்குமாரின் கழுத்தை நெரித்தபோது அவா் உயிரிழந்துவிட்டதாகவும் போலீசாரிடம் ஆா்த்தி தெரிவித்தாா். இதையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டு ஆா்த்தியை கைது செய்த போலீசார், நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory