» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!
புதன் 13, மார்ச் 2024 3:29:07 PM (IST)
குமரி மாவட்ட காவல்துறை அதிகாரிகளை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் காவல் ஆய்வாளர் சீதாலெட்சுமியிடம் புகார் அளிக்க சென்ற புகார்தாரரை பல மணி நேரம் காக்க வைத்தும் புகார் அளிக்க சென்றவர் மீது பொய் வழக்கு பதிவு செய்தும் அவருக்கு ஆதரவாக சென்ற வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதை கண்டித்தும் அதற்கு துணைபோகும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை கண்டித்தும் கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளானோர் கலந்து காெண்டு காவல்துறை அதிகாரியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.