» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

சனி 27, ஏப்ரல் 2024 5:17:10 PM (IST)

கோடை விடுமுறையையொட்டி சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையையொட்டி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் தென் மாவட்ட மக்கள் வசதிக்காக, சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை தோறும் சென்னை - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில்கள்(06067 / 06068) மே-2 முதல் ஜூன்-27 வரை இயக்கப்படுமென தெற்கு ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் சென்னை - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில்கள்(06057 / 06058) மே-3 முதல் ஜூன்-30 வரை இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory