» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விபத்தில் ஜிம் பயிற்சியாளர் பரிதாப பலி

சனி 22, ஆகஸ்ட் 2026 9:47:50 PM (IST)

தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் நடைபெற்ற விபத்தில், ஜிம் பயிற்சியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி பொன் சுப்பையா நகரைச் சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மகன் இளையராஜா (21). இவர் ஜிம் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார். இளையராஜா இன்று மாலை 8 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் பாளையங்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். 

எஃப்.சி.ஐ குடோன் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இளையராஜா விபத்தின் போது தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தார். எனவே, அவர் உண்மையில் நிலைதடுமாறி தான் கீழே விழுந்தாரா அல்லது பின்னாலிருந்து ஏதேனும் வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதா? என்ற கோணத்தில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory