» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய மரியன்னை கல்லூரியில் புத்தக விமர்சனம் - திறனாய்வுக் கலை சிறப்புப் பயிற்சி!

சனி 22, ஆகஸ்ட் 2026 5:25:12 PM (IST)

StmarysBooks.jpg

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் ஆங்கில முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறை, ELTAI அமைப்பின் ‘இந்தியா வாசிப்பு இயக்கம்’ வாசகர் மன்றத்துடன் இணைந்து "புத்தக விமர்சனம் மற்றும் மதிப்பீட்டுக் கலையைக் கற்றல்" என்ற தலைப்பில் சிறப்பு அறிமுக நிகழ்ச்சியை ஜூபிலி அரங்கில் நடத்தியது.

துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான பி. செரீனா மார்கரெட் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியரும், ELTAI தூத்துக்குடி மாவட்டச் செயலாளருமான பி. ஜூலைஹா ஷகீல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அருந்ததி ராயின் Mother Mary Comes to Me மற்றும் பானு முஷ்டாக்கின் Heart Lamp ஆகிய புத்தகங்களை மையமாகக் கொண்டு, இலக்கியப் படைப்புகளை எவ்வாறு அணுகுவது, திறனாய்வு செய்து விமர்சிப்பது மற்றும் மதிப்பீடு செய்வது போன்ற முறைகள் குறித்து அவர் விரிவாகக் விளக்கினார்.

இந்நிகழ்வை வி. டார்த்தி கேத்ரின், எம். ஹெர்மினா மற்றும் எம். மரியா ஆக்சிலியா ஜோசி ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட சுமார் 210 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு, புத்தக விமர்சனம் குறித்த கலந்துரையாடலில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

கல்லூரிச் செயலாளர் எஸ். குழந்தை தெரஸ், முதல்வர் சி. ஷிபானா, துணை முதல்வர் எம். எஸ். எழிலரசி மற்றும் கல்லூரி சுயநிதிப் பிரிவு இயக்குநர் ஏ. ஆரோக்கிய ஜெனீசியஸ் அல்போன்ஸ் ஆகியோரின் ஆதரவுடன் இந்நிகழ்ச்சி  நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory