» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்பப் பிரச்சினை: பூச்சி மருந்து குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி மரணம்!

வியாழன் 25, ஜூன் 2026 10:44:22 AM (IST)

தூத்துக்குடி அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக மன வேதனையில், பூச்சி மருந்து குடித்து வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் கட்டாலங்குளம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் சதீஷ்குமார் (20). இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இதனால் விரக்தியடைந்த சதீஷ்குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை மீட்ட குடும்பத்தினர், உடனடி சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சதீஷ்குமாருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று காலை சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சாயர்புரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory