» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவில் முன்பகுதி பொலிவு பெற்றது : புறக்காவல் நிலையக் கட்டடம் அகற்றம்!
சனி 20, ஜூன் 2026 7:44:06 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பிருந்த பழைய புறக்காவல் நிலையக் கட்டடத்தை இடித்து அகற்றும் பணிகள் நேற்று நடைபெற்றன.
திருச்செந்தூர் முருகன் கோவில் முகப்புப் பகுதியில் அமைந்திருந்த பழைய புறக்காவல் நிலையக் கட்டடமானது, கோவிலின் பிரம்மாண்ட முகப்பு அழகை மறைக்கும் வகையில் இருப்பதாகப் பக்தர்கள் மற்றும் ஆன்மீக அமைப்பினர் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இக்கோவிலில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்டங்களாகப் பிரம்மாண்ட பெருந்திட்ட வளாகப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவில் முகப்பை மறைக்கும் புறக்காவல் நிலையத்தை அங்கிருந்து அகற்றி, சிறிது தூரம் தள்ளி கடற்கரை ஓரமாகப் புதியதாக அமைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் அறிவித்திருந்தன.
அதன்படி, கடற்கரை ஓரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய புறக்காவல் நிலையக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த மே 31-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. புதிய காவல் நிலையம் செயல்படத் தொடங்கியதைத் தொடர்ந்து, கோவில் முகப்பில் காலியாக இருந்த பழைய புறக்காவல் நிலையக் கட்டடத்தை இடித்து அகற்றும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று முடிந்துள்ளன.
இந்தக் கட்டட அகற்றம் காரணமாக, இப்போது கடற்கரையில் இருந்து பார்க்கும்போது எவ்வித மறைப்போ இடையூறோ இன்றி கோவிலின் முழு முகப்புப் பகுதியும் மிக அழகாகக் காட்சியளிக்கிறது. இதனால் திருச்செந்தூருக்கு வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சர்வதேச யோகா தினம்: மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்பு!
சனி 20, ஜூன் 2026 12:37:39 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நிறுவன தின விழா: 600-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!
சனி 20, ஜூன் 2026 12:27:04 PM (IST)

சட்டவிரோதமாக மதுபான விற்பனை: ஒருவர் கைது!
சனி 20, ஜூன் 2026 11:49:52 AM (IST)

கிடப்பில் போடப்பட்ட சாலை விரிவாக்கப் பணிகள் : மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி!
சனி 20, ஜூன் 2026 11:40:05 AM (IST)

தூத்துக்குடியில் மூதாட்டியிடம் 1 பவுன் தங்கச் செயின் பறிப்பு: மர்மப் பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு!
சனி 20, ஜூன் 2026 11:25:11 AM (IST)

காதலியுடன் கருத்து வேறுபாடு: வாலிபர் தற்கொலை - தூத்துக்குடியில் சோகம்!
சனி 20, ஜூன் 2026 11:16:27 AM (IST)









