» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதலியுடன் கருத்து வேறுபாடு: வாலிபர் தற்கொலை - தூத்துக்குடியில் சோகம்!

சனி 20, ஜூன் 2026 11:16:27 AM (IST)

தூத்துக்குடியில் காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன வேதனையில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி கேம்ப்-1, முத்துநகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன் மகன் முத்துபாண்டி (19). இவர் சிறுவயது முதல் அவரது வளர்ப்பு தந்தையான மூர்த்தி என்பவரது வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். மேலும் அவர் அவர் தனது உறவுக்காரப் பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகக் காதலர்கள் இருவருக்கும் இடையே திடீரெனக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான முத்துபாண்டி, யாரிடமும் சரியாகப் பேசாமல் மிகுந்த மன வேதனையுடன் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தெர்மல்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முத்துபாண்டியின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory