» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலீஸ் வேலைக்கு செல்ல முடியாததால் கல்லூரி மாணவி தற்கொலை!

புதன் 17, ஜூன் 2026 11:53:17 AM (IST)

போலீஸ் வேலைக்கு செல்ல முடியாததால் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி கலைஞர் நகரில் வசிப்பவர் லட்சுமணன். இவரது மகள் திவ்யா (18). இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும், கல்லூரியில் என்சிசி மாணவியாக உள்ளார். அங்கு இவர் ஒழுங்கினமாக நடந்ததால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த திவ்யா நாம் போலீஸ் வேலைக்கு போக முடியாது என்று வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர்தனது வீட்டில் படுக்கை அறையில் தூக்கு போட்டு தொங்கி உள்ளார். 

இதை பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு இவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இவரது பிணம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்த சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory