» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்டோ மோதி விபத்து: முதியவர் உயிரிழப்பு!

வெள்ளி 19, ஜூன் 2026 10:45:35 AM (IST)

திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த முதியவர், மேலரத வீதியில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத ஆட்டோ மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவபெருமாள் மகன் ரவிச்சந்திரன் (62). இவர் நேற்று மதியம் 02:00 மணி அளவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி கும்பிடுவதற்காகத் தூத்துக்குடியில் இருந்து பேருந்து மூலம் திருச்செந்தூர் சென்றுள்ளார். பேருந்து நிலையத்திலிருந்து இறங்கி, அவர் கோவிலை நோக்கி மேலரத வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று, எதிர்பாராதவிதமாக ரவிச்சந்திரன் மீது பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்து மயக்க நிலையில் சாலையோரம் கிடந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்துதிருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ரவிச்சந்திரனுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory