» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போதை மறுவாழ்வு மையத்திலிருந்து திரும்பிய வாலிபர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:35:59 AM (IST)
தூத்துக்குடி அருகே போதை மறுவாழ்வு மையத்திலிருந்து வீடு திரும்பிய வாலிபர் நிலையில் கடுமையான வயிற்று வலி காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள காமராஜ் தெரு, பட்டாண்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் தாவீது. இவரது மகன் செல்வகுமார் (32). தொழிலாளியான இவர் கடந்த 10 வருடங்களாகத் தீவிர மதுப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்துள்ளார். இவரை மதுப் பழக்கத்திலிருந்து மீட்க அவரது மனைவி சுகந்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 13ஆம் தேதி புதுக்கோட்டை தேரிரோடு பல்க் எதிரே செயல்பட்டு வரும் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காகச் செல்வகுமாரை அவரது மனைவி சுகந்தி சேர்த்துள்ளார். அங்கு அவருக்குச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (ஜூன் 15) செல்வகுமாருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக மறுவாழ்வு மைய நிர்வாகத்தினர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று (ஜூன் 16) அதிகாலை 3:30 மணியளவில் செல்வகுமாருக்கு மீண்டும் மிக அதிகப்படியான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், செல்வகுமாரின் இதயத்துடிப்பு மிகவும் குறைவாக இருப்பதை அறிந்து, உடனடியாகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலமாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த அவசரப் பிரிவு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இச்சம்பவம் குறித்துத் தூத்துக்குடி அரசு மருத்துவமனை அளித்த தகவலின் பேரில், சாயர்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து வாலிபரின் மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னோடி மனுநீதி நாள்: பொதுமக்கள் மனுக்கள் அளிக்கத் வட்டாட்சியர் அழைப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 3:56:06 PM (IST)

மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராகப் போராட்டம்: புரட்சிப் படை இயக்கம் எச்சரிக்கை!
செவ்வாய் 16, ஜூன் 2026 3:42:40 PM (IST)

பிஆர்ஓக்கள் பணியிட மாற்றத்தில் பெரும் குளறுபடி: தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!
செவ்வாய் 16, ஜூன் 2026 3:11:09 PM (IST)

முதலமைச்சர் மாநில இளைஞர் விருக்கு ஜூலை 6-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:30:21 PM (IST)

தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:07:20 PM (IST)

வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த பைக்கிற்குத் தீவைப்பு : போலீசார் தீவிர விசாரணை!
செவ்வாய் 16, ஜூன் 2026 10:37:03 AM (IST)









