» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பொறியாளர் கவின் கொலை வழக்கு: குற்றவாளியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!
திங்கள் 15, ஜூன் 2026 12:22:57 PM (IST)

நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் கவின் வழக்கில், கைதான குற்றவாளிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் கவினின் உறவினர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐடி பொறியாளர் கவின் செல்வகணேஷ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லையில் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், கவினின் காதலியின் தந்தையான காவல் உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இந்த கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சுர்ஜித்தின் தந்தை சரவணனுக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரது ஜாமீனை உடனே ரத்து செய்யக் கோரியும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விசிக மற்றும் கவினின் தாய், உறவினர்கள் திரண்டு வந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: கவின் செல்வகணேஷ் சாதி ஆணவப் படுகொலை வழக்கில் எஸ்ஐ சரவணனுக்கு வழங்கப்பட்ட பிணையை உடனே ரத்து செய்ய, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். இவ்வழக்கைச் சிறப்பாக நடத்தத் தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனை சிறப்பு வழக்கறிஞராக உடனே நியமிக்க வேண்டும்.
தமிழகத்தில் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த, தமிழக அரசு உடனடியாக 'ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச் சிறப்புச் சட்டம்' இயற்ற வேண்டும். இக்கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற முக்கியக் குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலீஸ் பாதுகாப்பு:
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50 பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கத் தூத்துக்குடி காவல் ஆய்வாளர் தனசேகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு விதிகளின்படி, போராட்டக் குழுவினர் சார்பில் 4 பேர் மட்டும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்று மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனைவியை கல்லால் தாக்கிய கணவர் கைது : மது குடிப்பதற்கு பணம் தராததால் வெறிச்செயல்!
வெள்ளி 19, ஜூன் 2026 12:06:11 PM (IST)

வீட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் சாவு : தூத்துக்குடியில் சோகம்!
வெள்ளி 19, ஜூன் 2026 11:47:24 AM (IST)

அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை - தூத்துக்குடி அருகே பரபரப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 10:58:01 AM (IST)

ஆட்டோ மோதி விபத்து: முதியவர் உயிரிழப்பு!
வெள்ளி 19, ஜூன் 2026 10:45:35 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: பச்சிளம் குழந்தையைத் தவிக்கவிட்டு சோகம்!
வெள்ளி 19, ஜூன் 2026 10:34:03 AM (IST)

மாதாந்திர பராமரிப்பு பணி: சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி உட்பட பல பகுதிகளில் நாளை மின்தடை!
வெள்ளி 19, ஜூன் 2026 10:19:53 AM (IST)









