» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மினி பஸ் கண்ணாடி உடைப்பு: டிரைவர் கைது!
ஞாயிறு 14, ஜூன் 2026 9:10:23 AM (IST)
தூத்துக்குடியில் மினி பஸ் ஓட்டுநர்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, நடுரோட்டில் மினி பஸ்சை வழிமறித்துக் கல்வீசி முன்பக்கக் கண்ணாடியை உடைத்த மற்றொரு மினிபஸ் பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம, விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வீர சந்தோஷ் (26). இவர் தூத்துக்குடி நகரப் பகுதியில் மினி பேருந்து ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். அதேபோல், தூத்துக்குடி கோவில்பிள்ளை விளையைச் சேர்ந்தவர் சதீஷ் (32). இவரும் மினி பேருந்து ஓட்டுநராக உள்ளார். ஒரே வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கி வந்த இவர்கள் இருவருக்கும் இடையே பேருந்து இயக்குவது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் வீர சந்தோஷ் தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து தாளமுத்துநகர் வரை இயக்கப்படும் மினி பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தாளமுத்துநகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். மினி பேருந்து தாளமுத்துநகர் அருகே உள்ள ராஜபாளையத்திற்கு வந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சதீஷ் அந்த மினி பேருந்தை அதிரடியாக வழிமறித்து நிறுத்தினார்.
தொடர்ந்து பேருந்துக்குள் ஏறிச் சென்ற சதீஷ், ஓட்டுநர் வீர சந்தோஷிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த சதீஷ் பேருந்திலிருந்து கீழே இறங்கி, தரையில் கிடந்த பெரிய கல்லை எடுத்து மினி பேருந்தின் மீது வீசினார். இதில் மினி பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி முற்றிலும் உடைந்து நொறுங்கியது. பேருந்துக்குள் பயணிகள் இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து வீர சந்தோஷ் அளித்த புகாரின் பேரில், தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் வழக்குப் பதிவு செய்து, பேருந்தின் கண்ணாடியை உடைத்த ஓட்டுநர் சதீஷை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூக்குத்தண்டனை கைதிகளுக்குச் சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்க கோரிய மனு தள்ளுபடி!
ஞாயிறு 14, ஜூன் 2026 9:06:46 AM (IST)

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்குத் தொல்லை : போலீஸ் ஏட்டு அதிரடி பணி இடைநீக்கம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:55:01 AM (IST)

தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.3 கோடி கசகசா பறிமுதல் : போலி ஆணவங்கள் மூலம் மோசடி!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:35:29 AM (IST)

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் காங்கிரஸ் : தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:26:19 AM (IST)

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுப் பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: துரை வைகோ
ஞாயிறு 14, ஜூன் 2026 8:19:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓ-வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்!
சனி 13, ஜூன் 2026 9:55:14 PM (IST)









