» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.3 கோடி கசகசா பறிமுதல் : போலி ஆணவங்கள் மூலம் மோசடி!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:35:29 AM (IST)
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு, மலேசியாவிலிருந்து போலி ஆவணங்கள் மூலமாகத் திட்டமிட்டு கடத்தி வரப்பட்ட சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 5 டன் கசகசா மூட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு (DRI) அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனத்தின் முகவரிக்கு, மலேசியாவிலிருந்து தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு 40 அடி நீளமுள்ள சரக்குப் பெட்டகம் (Container) ஒன்று வந்திறங்கியது. இந்தச் சரக்குப் பெட்டகத்தின் மீது ஏற்பட்ட பலத்த சந்தேகத்தின் பேரில், மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அதனைத் தடுத்து நிறுத்தி தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
அந்தச் சரக்குப் பெட்டகத்திற்கான இறக்குமதி ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தபோது, அதில் மலேசியாவிலிருந்து பாலித்தீன் பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும் அதிகாரிகள் சரக்குப் பெட்டகத்தைத் திறந்து உள்ளே இருந்த பொருட்களை முழுமையாகச் சோதனையிட்டனர். அப்போது, பாலித்தீன் மூலப்பொருட்களுக்கு இடையே ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 டன் எடையுள்ள கசகசா மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆவணங்களை போலியாகத் தயாரித்துக் கடத்தி வரப்பட்ட அந்த 5 டன் கசகசா மூட்டைகளையும் அதிகாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்தனர். சர்வதேசக் கறுப்புச் சந்தையில் இதன் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கசகசா இறக்குமதிக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், இந்தச் சட்டவிரோத கடத்தலை ஈரோட்டு முகவரிக்கு இறக்குமதி செய்த போலி நிறுவனம் எது, இதன் பின்னணியில் செயல்படும் சர்வதேசக் கடத்தல் நபர்கள் யார் மற்றும் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்ட விதம் குறித்து மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மினி பஸ் கண்ணாடி உடைப்பு: டிரைவர் கைது!
ஞாயிறு 14, ஜூன் 2026 9:10:23 AM (IST)

தூக்குத்தண்டனை கைதிகளுக்குச் சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்க கோரிய மனு தள்ளுபடி!
ஞாயிறு 14, ஜூன் 2026 9:06:46 AM (IST)

புகார் கொடுக்க வந்த பெண்ணுக்குத் தொல்லை : போலீஸ் ஏட்டு அதிரடி பணி இடைநீக்கம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:55:01 AM (IST)

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகும் காங்கிரஸ் : தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:26:19 AM (IST)

சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுப் பிரச்சினைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்: துரை வைகோ
ஞாயிறு 14, ஜூன் 2026 8:19:26 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓ-வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்!
சனி 13, ஜூன் 2026 9:55:14 PM (IST)









