» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!
சனி 13, ஜூன் 2026 12:06:32 PM (IST)

தூத்துக்குடி அருகே வாகைகுளம் பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக அண்ணன், தம்பி ஆகிய இருவரைப் போலீசார் இன்று கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாகைகுளம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தைச் சேர்ந்த மகேந்திரன் மகன்கள் சுதாகர் (23) மற்றும் ராஜா (21) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகக் கஞ்சா வைத்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சுதாகர் மற்றும் ராஜா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிராம் கஞ்சாவைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்துப் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிகபட்சமாக 63 மதுக்கடைகள் மூடல்: மாவட்ட வாரியான பட்டியல் வெளியீடு!
திங்கள் 15, ஜூன் 2026 4:31:31 PM (IST)

வன்கொடுமைத் தடுப்புச் சட்ட கண்காணிப்புக் குழுவிற்கு விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 4:21:04 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, ஜூன் 2026 4:00:44 PM (IST)

பைக் நிலைதடுமாறி விபத்து: வாலிபர் உயிரிழப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 3:21:25 PM (IST)

இன்ஜினியரிங் மாணவர் தூக்கிட்டு தற்கொலை: நண்பருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு விபரீத முடிவு..!
திங்கள் 15, ஜூன் 2026 3:14:03 PM (IST)

ஏழைப் பெண்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் : நல்வாழ்வு சங்கம் கோரிக்கை!
திங்கள் 15, ஜூன் 2026 12:45:00 PM (IST)









