» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்தபோது மின்சாரம் தாக்கி மூதாட்டி பரிதாப சாவு!
வெள்ளி 5, ஜூன் 2026 11:42:19 AM (IST)
திருச்செந்தூர் அருகே வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்தபோது மின்சாரம் தாக்கி மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கீழப்பள்ளிபத்து பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை மனைவி பானுமதி (71). இந்த தம்பதியருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். பிள்ளைகள் அனைவரும் வாழ்வாதாரம் மற்றும் பணிகளின் நிமித்தமாக வெளியூர்களில் குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர்.
இதனால், பானுமதி மட்டும் கீழப்பள்ளிபத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இன்று காலையில் பானுமதி தனது வீட்டின் முற்றம் தெளிப்பதற்காகப் தண்ணீர் கொண்டு வந்து வாசலில் தெளித்துள்ளார். அப்போது, வீட்டின் வாசலில் வீட்டிற்கு மின்சார இணைப்பு கொண்டு வருவதற்காக நட்டு வைக்கப்பட்டிருந்த இரும்பு மின் கம்பியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
இதனை அறியாத பானுமதி, வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அந்த மின் கம்பியைத் தொட்டுள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுமக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது: தூத்துக்குடி பூ மார்க்கெட் டாஸ்மாக் கடை மூடல்!
வெள்ளி 5, ஜூன் 2026 9:33:23 PM (IST)

தூத்துக்குடியில் கொத்தனார் படுகொலை: அண்ணன், தம்பி உள்பட 3பேருக்கு ஆயுள் தண்டனை!
வெள்ளி 5, ஜூன் 2026 7:30:17 PM (IST)

தருவைகுளம் கடற்கரையைத் தூய்மைப்படுத்திய தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவர்கள்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:41:57 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.25 லட்சம் முறைக்கேடு: நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
வெள்ளி 5, ஜூன் 2026 4:29:57 PM (IST)

ஜமாபந்தியில் இதுவரை மொத்தம் 309 மனுக்கள் : 19 பயனாளிகளுக்கு உடனடி பட்டா வழங்கல்!
வெள்ளி 5, ஜூன் 2026 3:57:58 PM (IST)

டி.சி.டபிள்யூ. நிறுவனத்தில் உலகச் சுற்றுச்சூழல் தினம் : திடக்கழிவு மேலாண்மை அறிமுகம்!
வெள்ளி 5, ஜூன் 2026 3:22:59 PM (IST)










