» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உலக சுற்றுச்சூழல் தின விழா: மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் உறுதி மொழி ஏற்பு

வெள்ளி 5, ஜூன் 2026 11:26:01 AM (IST)



தூத்துக்குடியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

தூத்துக்குடியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஹவுசிங் போர்டு பகுதியிலுள்ள மாநகராட்சி பிங்க் பூங்காவில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மரக்கன்றுகள் நட்டு இயற்கை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலை வகித்தார். இதில், திமுக மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, அந்தோணி மார்சலின், தன்னார்வலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory