» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பெருமாள்புரம் பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை

வெள்ளி 5, ஜூன் 2026 11:02:54 AM (IST)



தூத்துக்குடி பெருமாள்புரம் பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தாெடர்பாக அப்பகுதி மக்கள் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சி 29-வது வார்டுக்கு உட்பட்ட பெருமாள்புரம் 1-வது தெருவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக இச்சாலை முழுவதும் தோண்டப்பட்டது.

மேற்படி பணிகள் நிறைவடைந்த பின்னரும், தற்பொழுது வரை சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகவே காட்சியளிக்கிறது. இதனால், இப்பகுதியில் அவசரச் சிகிச்சை ஊர்திகள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்திற்கு மிகவும் சிரமமான சூழல் நிலவுவதுடன், பொதுமக்கள் மற்றும் பள்ளிச் செல்லும் குழந்தைகள் தினசரி கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, தாங்கள் இப்பகுதியை நேரில் வந்து கள ஆய்வு செய்து, பொதுமக்களின் நலன் கருதி பெருமாள்புரம் 1-வது தெருவிற்குப் புதிய தார் சாலை அமைத்துத் தர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory