» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழகக் கனிம வளங்களை அழிக்க பாஜக சதி? சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் கண்டனம்!
வெள்ளி 8, மே 2026 9:03:22 PM (IST)

தமிழகத்தின் அரிய வகை கனிம வளங்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்க வழிவகை செய்யும் வகையில், பாஜகவின் சதித் திட்டத்திற்குத் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் உடந்தையாகச் செயல்படுவதாகத் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு சுயபரிசோதனை செய்யாமல், ஆட்சி அதிகாரத்திற்காகத் திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைவது தங்கள் தொண்டர்களுக்கும் வாக்காளர்களுக்கும் செய்யும் துரோகம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் மணல், கிரானைட் மற்றும் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்ட இரு கட்சிகளும், தங்கள் கொள்ளைப் பணத்தைப் பாதுகாக்கவும், கனிமக் கொள்ளையைத் தொடரவுமே இந்த முடிவை எடுத்துள்ளதாகச் சாடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டங்ஸ்டன், மாலிப்டினம், கிராபைட், பிளாட்டினம் உள்ளிட்ட 30 வகையான அரிய வகை கனிமங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றை மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் கூட இல்லாமல் வேதாந்தா, அதானி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் எடுப்பதற்கு ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்குத் தடையாக இருக்க மாட்டார்கள் என்பதால் தான் ஏற்கனவே கொள்ளையில் ஈடுபட்ட கட்சிகளை பாஜக ஆதரிக்கிறது என ஒருங்கிணைப்பாளர் இரா. சா. முகிலன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தைஆட்சி அமைக்க அழைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவது, தமிழக மக்களின் உணர்வுகளை மிதிக்கும் செயல் என்று அந்த இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தவெக ஆட்சிக்கு வந்தால் கனிமக் கொள்ளை தடுத்து நிறுத்தப்படும் என்ற அச்சமே இதற்குக் காரணம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2015-ல் சமர்ப்பிக்கப்பட்ட சகாயம் ஐஏஎஸ் அறிக்கை (கிரானைட் முறைகேடு).2013-ல் வழங்கப்பட்ட ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் அறிக்கை (தாது மணல் கொள்ளை). போன்ற முக்கிய ஆதாரங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இரு கட்சிகளும் நாடகமாடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மற்றும் சட்டவிரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து, தமிழகக் கனிம வளங்கள் கொள்ளை போவதைத் தடுக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி: ஜூன் 2 முதல் தொடக்கம் - ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு!
புதன் 13, மே 2026 8:29:55 PM (IST)

தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்களால் விபத்து அபாயம் : மாநகராட்சி ஆணையரிடம் பாஜக நிர்வாகிகள் புகார்!
புதன் 13, மே 2026 5:53:33 PM (IST)

எஸ்.ஐ-யை கைது செய்யக் கோரி போராட்டம் : தூத்துக்குடியில் மணிகண்டன் மனைவி பேட்டி!
புதன் 13, மே 2026 5:46:05 PM (IST)

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் கொலை: தம்பதி கைது - தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 13, மே 2026 5:21:10 PM (IST)

அமைச்சரவையில் நாடார் சமூக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: சமக தீர்மானம்!
புதன் 13, மே 2026 4:53:34 PM (IST)

இளம் செவிலியர் மர்ம மரணம்: போலீசார் தீவிர விசாரணை!
புதன் 13, மே 2026 4:33:07 PM (IST)











நன்றிமே 8, 2026 - 09:37:11 PM | Posted IP 104.2*****