» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம் செவிலியர் மர்ம மரணம்: போலீசார் தீவிர விசாரணை!

புதன் 13, மே 2026 4:33:07 PM (IST)

தூத்துக்குடி அருகே தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள நட்டாத்தி, எள்ளன்விளை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மகள் முருகேஸ்வரி (22). இவர் தூத்துக்குடியில் உள்ள நர்சிங் ஹோமில் பி.எஸ்சி நர்சிங் முடித்துவிட்டு, அதே மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார்.

நேற்று இரவு தனது மருத்துவமனைப் பணியை முடித்துவிட்டு முருகேஸ்வரி வீட்டிற்குத் திரும்பியுள்ளார். இரவு உணவருந்திவிட்டு உறங்கச் சென்ற அவர், இன்று காலை வெகுநேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாயார் உள்ளே சென்று பார்த்தபோது, முருகேஸ்வரி சுயநினைவின்றி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து உடனடியாகச் சாயர்புரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முருகேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, உயிரிழப்பிற்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory