» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஏணியில் ஏறியபோது தவறி விழுந்து இளம்பெண் பலி

புதன் 13, மே 2026 4:24:48 PM (IST)

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் பகுதியில் ஏணியில் ஏறியபோது வலிப்பு நோய் ஏற்பட்டு கீழே விழுந்ததில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டாரிமங்கலம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஜேசுராஜ். இவரது மகள் அமுதா (26). இவர் கடந்த 5 ஆண்டுகளாக மனநல பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்ததோடு, அவருக்குத் தீவிர வலிப்பு நோயும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இன்று காலை அமுதா வீட்டின் ஏணி வழியாக மாடிக்கு ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் நிலைகுலைந்த அவர் ஏணியில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory