» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்டவிரோதமாக விற்பனை: 994 மதுபாட்டில்கள் பறிமுதல் - மூவர் கைது!

வெள்ளி 8, மே 2026 8:02:17 PM (IST)



கோவில்பட்டி ஸ்ரீராம்நகர் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 1,000-க்கும் நெருக்கமான மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் மேற்பார்வையில், ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார் ஸ்ரீராம்நகர் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருளப்பசாமி (52) 2. மணிகண்டன் (50) மனோஜ் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், சட்டவிரோத லாபத்திற்காக மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த 994 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, இவ்வளவு அதிகமான மதுபாட்டில்கள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory