» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் 139 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது!

வெள்ளி 8, மே 2026 7:57:31 PM (IST)

கோவில்பட்டி அருகே சட்டவிரோத விற்பனைக்காக 139 கிலோ புகையிலை பொருட்களைக் கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெகநாதன் மேற்பார்வையில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்  நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று (07.05.2026) தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கோவில்பட்டி மந்திதோப்பு - பாண்டவர்மங்கலம் சாலை சந்திப்பு பகுதியில் போலீசார் வாகனங்களைச் சோதனையிட்டுக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த போலீசார், அவரது வாகனத்தைச் சோதனையிட்டனர்.

சோதனையில், அந்த நபர் சட்டவிரோத விற்பனைக்காகத் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மூட்டை மூட்டையாகக் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த திருப்பதி (50) என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரை உடனடியாகக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 139 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த கடத்தலில் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory