» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
லாரி மோதி விபத்து: செங்கல் சூளை உரிமையாளர் பலி!
வெள்ளி 8, மே 2026 7:51:25 PM (IST)
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், செங்கல் சூளை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (80). இவர் முத்துலாபுரம் வைப்பாற்றின் கரையோரம் செங்கல் சூளை நடத்தி வந்தார். இன்று மாலையில், சுப்பிரமணியன் தனது செங்கல் சூளையிலிருந்து டீ குடிப்பதற்காகத் தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு கடைக்குச் சென்றுள்ளார்.
இதற்காக அவர் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார்.அப்போது, தூத்துக்குடியிலிருந்து மதுரை நோக்கி அதிவேகமாக வந்த லாரி ஒன்று, எதிர்பாராத விதமாகச் சுப்பிரமணியன் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
விபத்து குறித்துத் தகவலறிந்த மாசாற்பட்டி போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுப்பிரமணியனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி: ஜூன் 2 முதல் தொடக்கம் - ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு!
புதன் 13, மே 2026 8:29:55 PM (IST)

தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்களால் விபத்து அபாயம் : மாநகராட்சி ஆணையரிடம் பாஜக நிர்வாகிகள் புகார்!
புதன் 13, மே 2026 5:53:33 PM (IST)

எஸ்.ஐ-யை கைது செய்யக் கோரி போராட்டம் : தூத்துக்குடியில் மணிகண்டன் மனைவி பேட்டி!
புதன் 13, மே 2026 5:46:05 PM (IST)

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் கொலை: தம்பதி கைது - தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 13, மே 2026 5:21:10 PM (IST)

அமைச்சரவையில் நாடார் சமூக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: சமக தீர்மானம்!
புதன் 13, மே 2026 4:53:34 PM (IST)

இளம் செவிலியர் மர்ம மரணம்: போலீசார் தீவிர விசாரணை!
புதன் 13, மே 2026 4:33:07 PM (IST)










