» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது!

வெள்ளி 8, மே 2026 3:24:42 PM (IST)

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காகத் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 14 கிலோ புகையிலை மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று முள்ளக்காடு ராஜீவ் நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் (42), சாயர்புரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (27) என்பதும், அவர்கள் சட்டவிரோத விற்பனைக்காகத் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 14 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் விற்பனை மூலம் கிடைத்த ரூபாய் 85,000 ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இப்பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory