» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 8, மே 2026 3:13:26 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரியும், மத்திய அரசு மற்றும் ஆளுநரைக் கண்டித்தும் கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் மத்திய பாஜக அரசு மற்றும் ஆளுநரைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அறிவிப்பின்படி, கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். நகரத் தலைவர் அருண்பாண்டியன் மற்றும் கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் ரமேஷ்மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க விடாமல் தடுப்பதும், ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுவதும் மக்களாட்சிக்கு எதிரானது என்று ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் ஐஎன்டியூசி ராஜசேகர், பிசிசி உறுப்பினர்கள் மகேஷ்குமார், உமாசங்கர் மற்றும் வழக்கறிஞர் அய்யலுசாமி, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜான் பிரிட்டோ பெத்துராஜ், மாவட்டச் செயலாளர் துரைராஜ். வட்டாரத் தலைவர்கள் ஜேம்ஸ் லாரன்ஸ், போத்திராஜ், யோகேஷ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் சக்தி கருப்பு, ஒன்றியத் துணைத் தலைவர் கனகராஜ் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளும் பங்கேற்றுத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். மத்திய அரசு உடனடியாக அரசியல் சாசனத்தின்படி செயல்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி: ஜூன் 2 முதல் தொடக்கம் - ஆட்சியர் விஷு மகாஜன் அறிவிப்பு!
புதன் 13, மே 2026 8:29:55 PM (IST)

தூத்துக்குடியில் டிஜிட்டல் பேனர்களால் விபத்து அபாயம் : மாநகராட்சி ஆணையரிடம் பாஜக நிர்வாகிகள் புகார்!
புதன் 13, மே 2026 5:53:33 PM (IST)

எஸ்.ஐ-யை கைது செய்யக் கோரி போராட்டம் : தூத்துக்குடியில் மணிகண்டன் மனைவி பேட்டி!
புதன் 13, மே 2026 5:46:05 PM (IST)

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் கொலை: தம்பதி கைது - தூத்துக்குடியில் பயங்கரம்!
புதன் 13, மே 2026 5:21:10 PM (IST)

அமைச்சரவையில் நாடார் சமூக எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்: சமக தீர்மானம்!
புதன் 13, மே 2026 4:53:34 PM (IST)

இளம் செவிலியர் மர்ம மரணம்: போலீசார் தீவிர விசாரணை!
புதன் 13, மே 2026 4:33:07 PM (IST)











Balaமே 8, 2026 - 03:34:57 PM | Posted IP 104.2*****