» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபர் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை

வெள்ளி 8, மே 2026 12:16:52 PM (IST)

எப்போதும்வென்றான் அருகே வீட்டில் மயங்கிக் கிடந்த வாலிபர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் கீழத்தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் வெற்றிவேல் முருகன் (30). இவர் இன்று காலை தனது வீட்டில் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வெற்றிவேல் முருகனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வெற்றிவேல் முருகன் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து பிரேதப் பரிசோதனை முடிவிலேயே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory