» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி கோபித்து கொண்டு சென்றதால் டிரைவர் தற்கொலை - தூத்துக்குடியில் பரிதாபம்!

வெள்ளி 8, மே 2026 12:09:29 PM (IST)

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்றதால் லாரி டிரைவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் பெருமாள் ராஜ் (34). லாரி ஓட்டுநரான இவருக்குத் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. தங்கப்பூ என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். பெருமாள் ராஜ் மதுப் பழக்கத்திற்குத் தீவிரமாக அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

மதுப் பழக்கத்தால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கோபித்துக் கொண்ட அவரது மனைவி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆறுமுகநேரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு மனைவியை அழைக்கச் சென்றபோது, அவர் வர மறுத்ததால் பெருமாள் ராஜ் மனமுடைந்து காணப்பட்டார்.

வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு பெற்றோரிடம் தகராறு செய்து வந்த பெருமாள் ராஜ், நேற்று மதியம் முதல் மது போதையில் மனைவியுடன் தொலைபேசியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அன்று இரவு அவரது தந்தை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பெருமாள் ராஜ் அறையில் சேலையால் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவல் அறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர், அவரைப் பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory