» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாழ்வாகச் செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகள் : சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

வியாழன் 30, ஏப்ரல் 2026 10:21:16 AM (IST)



சாத்தான்குளம் அருகே சாலையில் உயர் அழுத்த மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளதால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம், கோமாநேரி கிராமம் கூவைக்கிணற்றிலிருந்து நெடுங்குளம் மற்றும் வேலன்புதுக்குளம் பகுதி விவசாய நிலங்களுக்கு மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், கூவைக்கிணறு – நெடுங்குளம் செல்லும் சாலையில் மின்கம்பிகள் தரைமட்டத்திற்கு மிக அருகில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சாலை வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், மின்கம்பிகள் மோதிவிடுமோ என்ற அச்சத்திலேயே பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மின்கம்பிகள் இதே நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்குப் பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பெரும் அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன், மின்வாரிய உயர் அதிகாரிகள் தலையிட்டுத் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைத்துச் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory