» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பணியிடத்தில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை - கடை உரிமையாளர் மீது வழக்கு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 10:16:27 AM (IST)
சாத்தான்குளத்தில் கடையில் வேலை பார்த்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த முத்துக்குமார், அப்பகுதியின் புதிய பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து முன்பதிவு செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 25 வயதுடைய பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த 26-ஆம் தேதி மதியம், கடையில் உள்ள தனி அறையில் வைத்து அந்தப் பெண்ணிடம் முத்துக்குமார் பாலியல் ரீதியாகத் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்தப் பெண் சத்தமிட்டதைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். உடனே முத்துக்குமார், இச்சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக அந்தப் பெண்ணிற்கு மிரட்டல் விடுத்துவிட்டுத் தப்பியோடினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் நரசிம்மர் ஜெயந்தி விழா கோலாகலம் : சிறப்பு அபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 3:17:46 PM (IST)

ஆர்டிஇ மாணவர் சேர்க்கை: சான்றிதழ்களை விரைந்து வழங்க ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:38:07 PM (IST)

திருச்செந்தூர் வைகாசி விசாகம் திருவிழாவிற்கு சிறப்பு ரயில் சேவைகள் இயக்க கோரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 12:02:04 PM (IST)

விடுமுறை நாட்களில் ஆதார் சேவை செயல்படும் : தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் சிறப்பு ஏற்பாடு
வியாழன் 30, ஏப்ரல் 2026 11:51:36 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 10:50:57 AM (IST)

தூத்துக்குடியில்ஆவணங்கள் இருந்தும் நில அபகரிப்பு முயற்சி? நீதி கோரும் முதியவர் குடும்பத்தினர்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 10:30:15 AM (IST)









