» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பணியிடத்தில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை - கடை உரிமையாளர் மீது வழக்கு!

வியாழன் 30, ஏப்ரல் 2026 10:16:27 AM (IST)

சாத்தான்குளத்தில் கடையில் வேலை பார்த்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த முத்துக்குமார், அப்பகுதியின் புதிய பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து முன்பதிவு செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 25 வயதுடைய பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த 26-ஆம் தேதி மதியம், கடையில் உள்ள தனி அறையில் வைத்து அந்தப் பெண்ணிடம் முத்துக்குமார் பாலியல் ரீதியாகத் தவறாக நடக்க முயன்றுள்ளார். 

அப்போது அந்தப் பெண் சத்தமிட்டதைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். உடனே முத்துக்குமார், இச்சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக அந்தப் பெண்ணிற்கு மிரட்டல் விடுத்துவிட்டுத் தப்பியோடினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory