» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்களிக்கச் சென்றவர் சாலை விபத்தில் உயிரிழப்பு ‍: குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரிக்கை!

புதன் 29, ஏப்ரல் 2026 12:15:23 PM (IST)

"சட்டமன்றத் தேர்தலில், வாக்களிப்பதற்காகச் சென்ற போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று எம்பவர் இந்தியா' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆ.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் சென்னையில் வசித்து வந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக, தனது மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குப் புறப்பட்டார்.

பயணத்தின்போது நாங்குநேரி அருகே சென்றபோது, சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக சாலையோரம் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, அவர்கள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் ஜெயபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவரது மனைவியும் மகனும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து 'எம்பவர் இந்தியா' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆ.சங்கர் கூறுகையில், "ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வந்த ஜெயபாலனின் குடும்பம் பெரும் துயரத்தில் உள்ளது. எனவே, தமிழகத் தேர்தல் ஆணையம் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory