» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாடியிலிருந்து தவறி விழுந்த வாலிபர் பலி - போலீசார் விசாரணை

புதன் 29, ஏப்ரல் 2026 3:25:22 PM (IST)

விளாத்திகுளம் அருகே மதுபோதையில் மாடியிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த  தொழிலாளி ஒருவர்  உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அயன் பொம்மையாபுரம், வண்டிமலச்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமன் மகன் கோவிந்தராஜ் (38), கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது மனைவி அப்பகுதியில் உள்ள பால் பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

கோவிந்தராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு, அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு தனது வீட்டின் மாடியில் தூங்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கோவிந்தராஜின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory