» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயிலில் புகையிலை, குட்கா கடத்தியவர் கைது : கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சிக்கினார்!
சனி 25, ஏப்ரல் 2026 11:20:09 AM (IST)

பெங்களூரில் இருந்து ரயிலில் புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகளைக் கடத்தி வந்த நபரை, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இருப்புப் பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஸ்டீபன், ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சங்கரபாண்டி மற்றும் போலீசார் இன்று காலை கோவில்பட்டி ரயில் நிலைய நடைமேடையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூரு - மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 9 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வந்தது. அந்த ரயிலில் இருந்து ஒருவர் நான்கு பெரிய பைகளுடன் கீழே இறங்கினார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், அவரைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்தப் பைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 62 கிலோ புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம், வடக்குத் தெருவைச் சேர்ந்த சங்கையா என்பவரின் மகன் மாரிமுத்து (67) என்பது தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனர். கைதான மாரிமுத்து, ஏற்கனவே இதுபோன்று பெங்களூரில் இருந்து புகையிலை கடத்தி வந்தபோது இருமுறை கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் வாலிபர் பலி - இருவர் படுகாயம் : குலசை கோவில் சென்று திரும்பியபோது சோகம்
சனி 25, ஏப்ரல் 2026 3:45:33 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவான வாக்குகள்: தொகுதி வாரியான தகவல்கள்!
சனி 25, ஏப்ரல் 2026 3:18:16 PM (IST)

வெல்டிங் கடை உரிமையாளர் தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 25, ஏப்ரல் 2026 11:45:34 AM (IST)

தூத்துக்குடியில் ஒருவர் கட்டையால் தாக்கி கொலை : மதுபோதையில் நண்பர் வெறிச்செயல்!
சனி 25, ஏப்ரல் 2026 10:21:03 AM (IST)

வெயிலின் உக்கிரத்தில் தண்ணீருக்காக தவிக்கும் மக்கள்: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
சனி 25, ஏப்ரல் 2026 10:11:07 AM (IST)

இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: தூத்துக்குடி அருகே பரபரப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 9:02:30 AM (IST)







