» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்டமன்றத் தேர்தல்: தூத்துக்குடியில் வெடிபொருள் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!

வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:44:57 AM (IST)

சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வெடிபொருள் கடைகள் மற்றும் கிடங்குகளை மூடி வைக்க மாவட்டத் தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்றும், வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்றும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, பொது அமைதியைப் பேணும் வகையில் 1884-ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற அனைத்துக் கடைகள் மற்றும் கிடங்குகளை மூடி வைக்கத் தமிழக அரசு (அரசாணை எண்: G.O (D) No. 454, உள்துறை, நாள்: 18.03.2026) ஆணையிட்டுள்ளது.

மேற்கண்ட அரசாணையின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெற்ற அனைத்து வெடிபொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் கிடங்குகள் வாக்குப்பதிவை முன்னிட்டு 21.04.2026 முதல் 24.04.2026 வரை, வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு: 02.05.2026 முதல் 04.05.2026 வரை ஆகிய நாட்களில் கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும்:

இந்தத் தடையை மீறிச் செயல்படும் வெடிபொருள் கடைகள் மற்றும் கிடங்குகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





Thoothukudi Business Directory