» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லாரி மீது கார் மோதல்: தம்பதி உட்பட 4 பேர் பலி : குழந்தைகள் படுகாயம்!

திங்கள் 13, ஏப்ரல் 2026 5:43:00 PM (IST)

தூத்துக்குடி அருகே சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர், குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இன்னோவா காரில் சொந்த ஊர் திரும்பி கொண்டு இருந்தார். எட்டையபுரம் அருகே எம். கோட்டூர் விலக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நின்ற லாரி மீது கார் மோதியது.

விபத்தில் பாஸ்கரன், மனைவி வனிதா, உறவினர் வசந்தி மற்றும் கார் டிரைவர் பழனி ஆகியோர் உயிரிழந்தனர். அதில் பாஸ்கரனின் குழந்தைகள் சந்தியா மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்துவருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory