» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில்பட்டாசு கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டல் : வாலிபர் கைது!
புதன் 8, ஏப்ரல் 2026 8:26:38 AM (IST)
தூத்துக்குடியில் பட்டாசு கடை உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் (45). இவர் அதே பகுதியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த தூத்துக்குடி கீதா ஜீவன் நகரைச் சேர்ந்த ஜேசுராஜா (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரீகன் (28) ஆகிய இருவர், அந்தோணிராஜிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
பணம் தர மறுத்த அந்தோணிராஜுக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததுடன், கடையிலிருந்த பொருட்களைச் சேதப்படுத்த முயன்றதாகவும் தெரிகிறது. இந்த மிரட்டல் சம்பவம் குறித்து அந்தோணிராஜ் உடனடியாகத் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட போலீசார், வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜேசுராஜாவை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான ரீகனைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஜார்ஜ் ரோடு பகுதியில் கடைக்காரரை மிரட்டிய சம்பவம் அப்பகுதி வியாபாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்: ரூ.2.75 லட்சம் பறிமுதல் - 8பேர் சிக்கினர்!
புதன் 22, ஏப்ரல் 2026 11:16:32 AM (IST)

தூத்துக்குடி எஸ்.பி., அலுவலகம் அருகே 5½ அடி நீள நல்லபாம்பு மீட்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 10:57:08 AM (IST)

சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: குழந்தை உள்பட 20 பேர் காயம்!
புதன் 22, ஏப்ரல் 2026 10:33:36 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தேர்தல் திருவிழா : 6 தொகுதிகளில் 92 வேட்பாளர்கள் களம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:08:31 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா : சுவாமி - அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதி உலா!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:52:50 PM (IST)

தூத்துக்குடியில் ரயில்வே கேட் மீது ஆட்டோ மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு - பொதுமக்கள் கடும் அவதி!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:17:01 PM (IST)







