» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில்பட்டாசு கடைக்காரரிடம் பணம் கேட்டு மிரட்டல் : வாலிபர் கைது!

புதன் 8, ஏப்ரல் 2026 8:26:38 AM (IST)

தூத்துக்குடியில் பட்டாசு கடை உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் (45). இவர் அதே பகுதியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த தூத்துக்குடி கீதா ஜீவன் நகரைச் சேர்ந்த ஜேசுராஜா (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரீகன் (28) ஆகிய இருவர், அந்தோணிராஜிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

பணம் தர மறுத்த அந்தோணிராஜுக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததுடன், கடையிலிருந்த பொருட்களைச் சேதப்படுத்த முயன்றதாகவும் தெரிகிறது. இந்த மிரட்டல் சம்பவம் குறித்து அந்தோணிராஜ் உடனடியாகத் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட போலீசார், வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜேசுராஜாவை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான ரீகனைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஜார்ஜ் ரோடு பகுதியில் கடைக்காரரை மிரட்டிய சம்பவம் அப்பகுதி வியாபாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory