» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1.80 கோடி பறிமுதல்; ரூ.89.41 லட்சம் விடுவிப்பு - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:50:02 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.1.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.89.41 லட்சம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சோதனையில் இன்று (21.04.2026) வரை கைப்பற்றப்பட்ட விவரங்கள்: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக மொத்தம் ஒரு கோடியே 80 லட்சத்து 81 ஆயிரத்து 218 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ.7,57,517 மதிப்பிலான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில், அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து முறையான விளக்கம் அளித்தவர்களுக்கு, மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரையின் பேரில் இதுவரை 89 லட்சத்து 41ஆயிரத்து 268 ரூபாய் உரியவர்களிடம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் விசு மகாஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:28:39 PM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை : வாலிபர் கைது - 85 பாட்டில்கள் பறிமுதல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:10:34 PM (IST)

வீடு வீடாக வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா : திமுக பெண் நிர்வாகியிடம் ரூ.1.38 லட்சம் பறிமுதல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:53:18 PM (IST)

அரசியல் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு: காவலர் சஸ்பெண்ட் - எஸ்பி அதிரடி உத்தரவு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:46:18 PM (IST)

தேர்தல் கட்டுப்பாடுகளை மீறினால் 2 ஆண்டு சிறை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:03:44 PM (IST)

முறைகேடு புகார்: தூத்துக்குடி மாநகராட்சியில் 3 டெண்டர்கள் மற்றும் பணி உத்தரவுகள் ரத்து!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 3:49:52 PM (IST)







