» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்துத் திருட்டு: போலீஸார் விசாரணை

செவ்வாய் 7, ஏப்ரல் 2026 10:51:08 AM (IST)

தூத்துக்குடியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி சுந்தரராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் பாஸ்கரன் (70). இவர் நந்தகோபாலபுரம் பிரதான சாலையில் (மெயின் ரோடு) மளிகைக் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணியளவில் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். இன்று காலை 6 மணியளவில் மீண்டும் கடையைத் திறக்க வந்தபோது, கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பாஸ்கரன் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், வடபாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த 10 சிகரெட் பாக்கெட்டுகள், 23 குளிர்பான பாட்டில்கள் மற்றும் ரொக்கப் பணம் 3,000 ரூபாய் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்தத் திருட்டுச் சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory