» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை : வாலிபர் கைது - 85 பாட்டில்கள் பறிமுதல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:10:34 PM (IST)
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மது விற்பனைக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களைப் பதுக்கி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி பூ மார்க்கெட் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகத் தூத்துக்குடி நகர தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் அப்பகுதியில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் தூத்துக்குடி அண்ணாநகர் 5-வது தெருவைச் சேர்ந்த சக்திபாலன் (31) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து மொத்தம் 85 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சக்திபாலனை மத்திய பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த தனிப்படை போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1.80 கோடி பறிமுதல்; ரூ.89.41 லட்சம் விடுவிப்பு - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:50:02 PM (IST)

தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 5:28:39 PM (IST)

வீடு வீடாக வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா : திமுக பெண் நிர்வாகியிடம் ரூ.1.38 லட்சம் பறிமுதல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:53:18 PM (IST)

அரசியல் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு: காவலர் சஸ்பெண்ட் - எஸ்பி அதிரடி உத்தரவு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:46:18 PM (IST)

தேர்தல் கட்டுப்பாடுகளை மீறினால் 2 ஆண்டு சிறை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:03:44 PM (IST)

முறைகேடு புகார்: தூத்துக்குடி மாநகராட்சியில் 3 டெண்டர்கள் மற்றும் பணி உத்தரவுகள் ரத்து!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 3:49:52 PM (IST)







