» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காதலி பேசாததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை: மார்த்தாண்டம் அருகே சோகம்
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:22:09 PM (IST)
மார்த்தாண்டம் அருகே காதலி பேசாத காரணத்தால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அடுத்த காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மகன் அபி (23). 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், கேரளா மாநிலத்தில் தேன் பெட்டி தொழில் செய்து வந்தார். தற்போது ஈஸ்டர் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
ஊருக்கு வந்த நாள் முதல் அபி யாரிடமும் பேசாமல் மௌனமாக இருந்து வந்துள்ளார். விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்ததாகவும், சமீபகாலமாக அந்தப் பெண் அவரிடம் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அபி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் வீட்டிற்கு வந்த அபி, உணவு சாப்பிட மறுத்துவிட்டுத் தனது அறைக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது அபி மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்த நிலையில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேச்சிப்பாறை போலீசார், அபியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்தல் என்பது திருவிழாவல்ல, தமிழகத்தைக் காக்கும் போர்: அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:14:10 PM (IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9பேருக்கும் இரட்டை மரண தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 6, ஏப்ரல் 2026 6:00:17 PM (IST)

விளாத்திகுளம் தொகுதி: அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் வேட்பாளர் தாக்கல்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 5:42:47 PM (IST)

திருச்செந்தூர்: பாஜக வேட்பாளர் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்
திங்கள் 6, ஏப்ரல் 2026 4:54:40 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.97 லட்சம் ரொக்கம் பறிமுதல்: தேர்தல் சோதனை தீவிரம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 3:55:07 PM (IST)

மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு மூதாட்டி கொலை வழக்கு ஜாமீன் ரத்து!
திங்கள் 6, ஏப்ரல் 2026 3:43:23 PM (IST)







