» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு - ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு

செவ்வாய் 24, மார்ச் 2026 4:28:16 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் ஆய்வு செய்தார்.

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில், கணினி மூலம் ‘ரேண்டம்’ (Randomization) முறையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பு அறையிலிருந்து, இஎம்எஸ் 2.0 (EMS 2.0) என்ற மொபைல் செயலி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட மூடப்பட்ட கன்டெய்னர் லாரிகள் மூலம், தகுந்த காவல்துறை பாதுகாப்புடன் இந்த இயந்திரங்கள் அந்தந்தத் தொகுதி மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட உள்ளன. இப்பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory