» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு - ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு
செவ்வாய் 24, மார்ச் 2026 4:28:16 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக அனுப்பும் பணிகளை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் ஆய்வு செய்தார்.
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில், கணினி மூலம் ‘ரேண்டம்’ (Randomization) முறையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பு அறையிலிருந்து, இஎம்எஸ் 2.0 (EMS 2.0) என்ற மொபைல் செயலி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட மூடப்பட்ட கன்டெய்னர் லாரிகள் மூலம், தகுந்த காவல்துறை பாதுகாப்புடன் இந்த இயந்திரங்கள் அந்தந்தத் தொகுதி மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட உள்ளன. இப்பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.14லட்சம் பறிமுதல்? வருமான வரித்துறை அதிரடி சோதனை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:43:49 PM (IST)

ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையை மூடிமறைக்க முயன்றவர் இபிஎஸ் : கனிமொழி எம்.பி. சாடல்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:02:16 PM (IST)

கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை தோல்வி: தேர்தல் புறக்கணிப்பு - பொட்டலூரணி மக்கள் உறுதி!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:32:27 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:03:48 AM (IST)

அரசின் திட்டங்களே எங்களின் வெற்றிச் சின்னம்: திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவன் நம்பிக்கை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:53:10 AM (IST)

தமிழக நலனுக்காக போராடும் உங்கள் வீட்டுப் போர் வீரன் நான்: பிரச்சாரத்தில் ராகுல் காந்தி முழக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:47:24 AM (IST)







