» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் பணி இடைநீக்கம்: முறைகேடு புகாரில் நடவடிக்கை!

செவ்வாய் 17, மார்ச் 2026 8:19:36 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் சரவணக்குமார், பழைய திட்டப்பணிகளில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அதிரடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் சரவணக்குமார் துணை ஆணையராகப் பணியாற்றி வருவதற்கு முன்னதாக, நாகர்கோவில் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சிகளில் பணியாற்றியுள்ளார். அந்த சமயத்தில், குப்பைகளைத் தரம் பிரித்து உரமாக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளில் அவர் முறைகேடு செய்ததாகப் புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு (Vigilance) போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் தொடர்ச்சியாக, சரவணக்குமாரைத் துறை ரீதியாகப் பணி இடைநீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனர் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு நகலைத் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா நேற்று அவரிடம் நேரில் வழங்கினார்.

நேற்று வழக்கம்போல் அலுவலகப் பணிக்காக வந்திருந்த துணை ஆணையர் சரவணக்குமார், ஆணையரிடம் இருந்து இடைநீக்க உத்தரவைப் பெற்றுக் கொண்டார். நகலைப் பெற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து விறுவிறுவென வெளியேறிச் சென்றார். இந்தச் சம்பவம் மாநகராட்சி ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory