» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல்துறை மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம்: சிறப்பாகப் பணியாற்றிய 48 காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு
ஞாயிறு 8, மார்ச் 2026 8:44:12 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டத்தில், சிறப்பாகப் பணியாற்றிய 48 காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளின் புலன் விசாரணை நிலை, கஞ்சா மற்றும் புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், நீதிமன்றப் பணிகளை விரைந்து முடிக்கவும் எஸ்பி உத்தரவிட்டார். மேலும், வரவிருக்கும் தேர்தல் பாதுகாப்புப் பணிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற சங்கிலி பறிப்பு (Chain Snatching) சம்பவத்தில், துரிதமாகச் செயல்பட்டு எதிரியைக் கைது செய்து சொத்துக்களை மீட்ட காவல் குழுவினருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதுதவிர, கடந்த பிப்ரவரி மாதத்தில் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் என மொத்தம் 48 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நற்பணிச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், தீபு மற்றும் மாவட்டத்தின் அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் சின்னம் பட்டியல்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:12:53 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1868 ஆக உயர்வு: இறுதி பட்டியலில் 13.88 லட்சம் வாக்காளர்கள்..!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:57:32 PM (IST)

மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)







