» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி-யாக தேர்வு : உதயநிதி ஸ்டாலினுக்கு மீனவச் சமூகத்தினர் நன்றி!

ஞாயிறு 8, மார்ச் 2026 8:38:57 AM (IST)



மீனவர் சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்ததற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மீனவச் சமூகத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகப் பரதர் குலத்தைச் சேர்ந்த பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். மீனவர் சமுதாயத்திற்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் இந்த முக்கிய வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வருக்குச் சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசு முறைப் பயணமாகத் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, கோரமண்டல் சமூக நற்பணி மன்றத் தலைவர் பிரின்ஸ்டன் மெரிண்டோ வி. ராயன் தலைமையிலான நிர்வாகிகள் நேரில் சந்தித்தனர். மீனவச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை டெல்லி அவைக்கு அனுப்பி வைத்ததற்காக முதல்வருக்குத் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டதோடு, துணை முதல்வருக்குப் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory