» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆழ்வார்திருநகரி கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
சனி 7, மார்ச் 2026 8:27:44 AM (IST)
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில்இந்த ஆண்டிற்கான மாசித் திருவிழா கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து விஸ்வரூபம் மற்றும் திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டி வழிபாடுகள் நடைபெற்றன: காலை 7 மணிக்கு, மீன லக்னத்தில் சுவாமி நம்மாழ்வார் சிறப்பு அலங்காரங்களுடன் திருத்தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்திப் பெருக்குடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலை சேர்ந்தது.
இந்நிகழ்வில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், கோயில் செயல் அலுவலர் சதீஷ், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆதிநாதன், திமுக நகரச் செயலாளர் கோபிநாத், அதிமுக நகரச் செயலாளர் செந்தில் ராஜகுமார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
சனி 7, மார்ச் 2026 12:31:36 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா
சனி 7, மார்ச் 2026 12:04:40 PM (IST)

பஞ்ச் டயலாக்' பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள்: தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் சாடல்!
சனி 7, மார்ச் 2026 11:01:49 AM (IST)

அணுகு சாலை அமைக்கக் கோரி சாலை மறியல் போராட்டம் : அதிமுக - பாஜக கூட்டணி அறிவிப்பு!
சனி 7, மார்ச் 2026 10:35:25 AM (IST)

தூத்துக்குடியில் துணிகரம்: கத்தி முனையில் 7 பவுன் நகை பறிப்பு - 3 மணி நேரத்தில் குற்றவாளி அதிரடி கைது!
சனி 7, மார்ச் 2026 10:21:03 AM (IST)

இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 7, மார்ச் 2026 8:48:07 AM (IST)








