» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அய்யா வைகுண்டர் அவதார தினம்: பாதுகாப்புப் பணிகள் குறித்து எஸ்பி நேரில் ஆய்வு!
புதன் 4, மார்ச் 2026 8:21:42 AM (IST)

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை முன்னிட்டு, பாதுகாப்புப் பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அய்யா வைகுண்டரின் 194-வது அவதார தின விழா இன்று (04.03.2026) வெகுவிமர்சையாக நடைபெறுகிறது. இதையொட்டி, திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், விழாக்களும் நடைபெற உள்ளன.
இந்த விழாவைக் முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் உத்தரவின் பேரில், திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயில் வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறையினர் இரவு பகலாகத் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடற்கரைப் பகுதியில் புனித நீராடும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, சீருடை மற்றும் சாதாரண உடையில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று (03.03.2026) மாலை நேரில் வருகை தந்தார்.
கோயில் வளாகம் மற்றும் கடற்கரைப் பகுதிகளைப் பார்வையிட்ட அவர், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கினார். பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி விழாவினைச் சிறப்பாக நடத்தி முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது, திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மதுரை வீரன் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் சின்னம் பட்டியல்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:12:53 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1868 ஆக உயர்வு: இறுதி பட்டியலில் 13.88 லட்சம் வாக்காளர்கள்..!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:57:32 PM (IST)

மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)







