» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 5:42:34 PM (IST)
கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டியவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு, வடக்கன்குளத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம், வள்ளியூரைச் சேர்ந்த சுடலை கண்ணன் (45) என்பவர் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிவில், சுடலை கண்ணன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து, குற்றவியல் நீதித்துறை நடுவர் மோசஸ் ஜெபசிங், குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நேற்று அதிரடி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சிறப்பாகப் புலன் விசாரணை செய்து, நீதிமன்றத்தில் சாட்சிகளை ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுத் தந்ததற்காக வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், அப்போதைய இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் (தற்போது திருப்பூர் டி.எஸ்.பி.), வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், தலைமை காவலர் பரமசிவன் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆலன் ராயன் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் நேரில் பாராட்டியுள்ளார்.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் உரிய சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தொடர்ந்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது : இரு சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 9:20:48 PM (IST)

முத்தாலங்குறிச்சி காமராஜ்-க்கு சமூக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைமைத்துவ விருது: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:37:02 PM (IST)

கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சமூக சேவை : தூத்துக்குடி நீதிக்குழுமம் தீர்ப்பு
செவ்வாய் 3, மார்ச் 2026 7:40:21 PM (IST)

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் : தூத்துக்குடியில் 3 நாள் கருத்தரங்கு தொடக்கம்!
செவ்வாய் 3, மார்ச் 2026 4:10:23 PM (IST)

தூத்துக்குடியில் 102 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம்: அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 3, மார்ச் 2026 11:58:07 AM (IST)

வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீளச் சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 10:51:26 AM (IST)










